Friday, February 17, 2006

தலைமுறை...

ஒவ்வொரு தலைமுறையின் தலையாய கடமைகளில் ஒன்று, தாம் கற்றுணர்ந்ததை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பதாகும்.
அவ்வாறு எடுத்துரைக்க இயலாத ( தவறிய) ஒவ்வொரு
தலைமுறையும் "இணரூழ்த்தும் நாறா மலர்" க்கு இனையாவர்
என்பது வள்ளுவர் வாக்கு.


கடந்தகாலத்தை வருங்காத்திற்கு எடுத்துச் செல்பவர்கள், தான்
எடுத்துச் செல்லும் செய்திகளின் மெய்யறிந்து, மிகைப்படுத்தாமல் எடுத்துச் செல்லவேண்டும். செய்திகளை மிகைப்படுத்துதலுக்கு
ஆட்படுத்தும் போது, அதன் மெய்வடிவம் ம்ருவி, தவறான
செய்திகள்தான் வருங்காலத்தைச் சென்றடைகிறது.


என் சிந்தனைக்கு எட்டிய சில ( மிகைப்படுத்தப்பட்ட) செய்திகளை
வரும் பதிவுகளில் பதியவுள்ளேன்.


No comments: