காதலே...
உயிர் கொடுத்ததும் - பின்
உடல் கொடுத்ததும் காதல்
உன்னை கண்டதும் - பின்
என்னை கண்டதும் காதல்
தன்னலம் அழித்ததும் - பின்
தலைக்கணம் அழித்ததும் காதல்
நேசம் தந்ததும் - பின்
பாசம் தந்ததும் காதல்
நான் கொண்டதும் - பின்
என்னை கொண்டதும் காதல்
நீ வந்ததும் - பின்
கவி வந்ததும் காதல்
முடிவாக...
நான் தொலைத்ததும் - பின்
என்னை தொலைத்ததும் காதலே...
-தமிழ் தாசன்.
2 comments:
நீங்கள் எனது "இடைவேளைக்குப்பின் காட்சியில்லை" பதிவைப் படித்திருந்தால், 'என்னைப்ப்போல் இன்னொருவன்' என்று கண்டிப்பாகச் சொல்லி இருப்பீர்கள் என நம்புகிறேன்.
நல்ல கவிதை. தொடருங்கள்.
-ஞானசேகர்
பதிவுக்கு வந்தமைக்கு நன்றி
தங்களது "இடைவேளைக்குப்பின் காட்சியில்லை"
மிக நன்று.
//கரைதொடும் நுரைதொட நடுங்கியவள் நீதான்//
வார்த்தை பிரயோகம் மிக நன்று..
Post a Comment