Friday, February 10, 2006

காதலே...



உயிர் கொடுத்ததும் - பின்
உடல் கொடுத்ததும் காதல்

உன்னை கண்டதும் - பின்
என்னை கண்டதும் காதல்

தன்னலம் அழித்ததும் - பின்
தலைக்கணம் அழித்ததும் காதல்

நேசம் தந்ததும் - பின்
பாசம் தந்ததும் காதல்

நான் கொண்டதும் - பின்
என்னை கொண்டதும் காதல்

நீ வந்ததும் - பின்
கவி வந்ததும் காதல்

முடிவாக...

நான் தொலைத்ததும் - பின்
என்னை தொலைத்ததும் காதலே...

-தமிழ் தாசன்.

2 comments:

J S Gnanasekar said...

நீங்கள் எனது "இடைவேளைக்குப்பின் காட்சியில்லை" பதிவைப் படித்திருந்தால், 'என்னைப்ப்போல் இன்னொருவன்' என்று கண்டிப்பாகச் சொல்லி இருப்பீர்கள் என நம்புகிறேன்.

நல்ல கவிதை. தொடருங்கள்.

-ஞானசேகர்

தமிழ் தாசன் said...

பதிவுக்கு வந்தமைக்கு நன்றி

தங்களது "இடைவேளைக்குப்பின் காட்சியில்லை"
மிக நன்று.

//கரைதொடும் நுரைதொட நடுங்கியவள் நீதான்//

வார்த்தை பிரயோகம் மிக நன்று..