தமிழ் திரைப்படங்களில், பாடல்களைத் தவிர பிற காட்சிகளில் வரும் கவிதைகள் அவ்வளவாக மனதில் நிற்பதில்லை. அவற்றுள் ஒன்று இதோ...
"டூயட்" திரைப்படத்தில், எனக்கு மிகவும் பிடித்த வைர வரிகள்...
சத்தத்தினால் உண்ட பித்தத்தினால்
காதல் யுத்ததினால் எனது ரத்ததினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி.
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி.
கண் பார்த்ததும், கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும், தள்ளிப்பின் பார்த்ததும்
சுட்டாலும், மறக்காது நெஞ்சம்.
முற்றும் சொன்னத்தில்லை தமிழுக்கு பஞ்சம்.
கண்டிப்பதால், என்னை நிந்திப்பதால்,
நெஞ்சை தண்டிப்பதால், தலையை துண்டிப்பதால்,
தீராது என் காதல் என்பேன்.
நீ தீ அள்ளி தின்னச்சொல் தின்பேன்.
உம் என்று சொல், இல்லை நில் என்று கொல்.
என்னை வாவென்று சொல் இல்லை போவென்று கொல்.
உம் என்றால் உள்ளதடி சொர்க்கம்.
நீ இல்லை என்றால் ஈடுகாடு பக்கம்.
Monday, February 27, 2006
எட்டு நிமிடம்...
"தலைமுறை", "ஆப்பிள்" என்னும் பதிவின் தொடர்ச்சியாக என் சிந்தனைக்கு எட்டிய மற்றுமொரு செய்தி.
விரிந்திருக்கும் வானவெளியில், ஆச்சரியங்கள் நிறைந்திருக்கும் என்பதால், விண்ணைப் பார்த்து வியக்காத மன்வாசிகள் இல்லை எனலாம். அறியாத வரை செய்திகள் கூட ஆச்சரியம் தான். இதோ நான் முதலில் ஆச்சரியப்பட்டு பின்பு அறிந்துகொண்ட ஒரு செய்தி.
வானவெளியில் நாம் காணும் ஒவ்வொரு விண்மீனும் (star) நம்மிலிருந்து பல ஒளியாண்டு தொலைவில் உள்ளது. ஒரு ஒளியாண்டு என்பது தூரத்தின் அளவில் 5,865,696,000,000 மைல்கள் எனப்படும், காலத்தின் அளவில் ஒரு வருடம் எனப்படும். இதனால் விண்மீனில் இருந்து வெளியிடப்பட்ட ஒளி, நம்மை வந்தடைய (நம் கண்களுக்குப் புலப்பட) பல வருடங்கள் ஆகும். நாம் ஒரு விண்மீனைப் பார்க்கும் பொழுது, நம் கண்களுக்கு தென்படும் ஒளி, அந்த விண்மீனால், அக்கணத்தில் வெளியிடப்பட்டதல்ல. அந்த ஒளி, அந்த விண்மீனால் பல வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டதாகும்.
உதாரணத்திற்கு, நாம் காணும் ஒரு விண்மீன் நம்மிலிருந்து மூவாயிரம் ஒளியாண்டு தொலைவில் இருக்குமாயின், இன்று நாம் காணும் ஒளி அந்த விண்மீனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டதாகும். இன்று அந்த விண்மீன் அழிந்து போயிருக்கவும் வாய்ப்பிருக்கின்றது.
அதேபோல், வானவெளியில் விண்மீன்களுக்கிடையே நாம் காணும் வெற்றிடத்தில் விண்மீன்கள் இல்லை என்பதும் தவறு. அங்கு விண்மீன்கள் இருந்தும் நம் கண்களுக்கு புலப்படாததிற்கு காரணம், அந்த விண்மீன்களால் வெளியிடப்பட்ட ஒளி நம்மை இன்னும் வந்தடையவில்லை என்பதால்.
நமக்கு மிகவும் அருகில் (எட்டு ஒளிநிமிடம் மற்றும் இருபது ஒளிவிநாடி தொலைவில்) இருக்கின்ற விண்மீனுக்கு "சூரியன்" என்று நாம் பெயரிட்டுள்ளோம். இக்கணத்தில் நாம் காணும் ஒளி, சூரியனால் எட்டு நிமிடம் மற்றும் இருபது விநாடிக்கு முன்பு வெளியிடப்பட்டதாகும்.ஒருவேளை இக்கணமே சூரியன் இருண்டுவிட்டாலும், நீங்கள் இந்த பதிவைப் படித்து முடித்து பின்னூட்டம் எழுதும் வரை உங்களுக்கு ஆபத்து இல்லை என்றும் சொல்லலாம்.
பி.கு :
ஒரு ஒளியாண்டு என்பது, ஒரு வருடத்தில் ஒளி பயனம் செய்யும் தூரமாகும்.
ஒரு ஒளிநிமிடம் என்பது, ஒரு நிமிடத்தில் ஒளி பயனம் செய்யும் தூரமாகும்.
Thursday, February 23, 2006
அங்கிகாரம்...
"தமிழ்தாசன்" என்னும் இந்த பதிவுமனையை பாராட்டிய "தேன்கூடு" வலைதளத்திற்கும், எனது பதிவுகளை வெளியிட்ட "தினமலர்" வலைதளத்திற்கும் என் நன்றிகள் பல.
இந்த உலகில் ஒவ்வொருவரும் தாம் செய்யும் செயல்களுக்கு,
அங்கிகாரம் கிடைக்கையில் மட்டற்ற மகிழ்சியடைகிறோம். அது
நமக்கு கிடைத்த பாராட்டு மட்டுமல்ல, வரும் நாட்களில்
நம்மை ஊக்குவிக்கும் உந்துசக்தியும் அதுவே. அங்கிகாரம் கிடைக்க நாம் செய்த உழைப்பை விட, அதை தக்க வைத்துகொள்ள நாம் கடினமாக உழைத்திட வேண்டும்.
அதை எளிதாக செய்திட தூண்டும் ஒரு நிகழ்வு..
ஒருமுறை சில மாணவர்கள் ஒரு மரத்தின் கிளையின் ஒரு பந்தை தொங்க விட்டு, அதை துப்பாக்கியால் சுட முயன்றனர். அவர்களால் பல முறை முயன்றும் சரியாக சுட முடியவில்லை. அப்போது அந்த வழியே வந்த சுவாமி விவேகானந்தர், "நான் ஒருமுறை சுடுகிறேன். துப்பாக்கியை என்னிடம் தாருங்கள்" என்றார். அதற்கு அவர்கள் "நீங்கள் இதுவரை துப்பாக்கியை தொட்டது கூட இல்லை, உங்களால் சுட முடியாது" என்று ஏளனம் செய்து, துப்பாக்கியை அவரிடம் கொடுத்தனர். அதற்கு, "நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நான் இதுவரை துப்பாக்கியை தொட்டது கூட இல்லை, ஆயினும் நான் சுட முயற்சி செய்கிறேன்" என்றவர் அந்த பந்தை நோக்கி குறிவைத்தார். அவர் சுட்டதும் அந்த பந்து சிதைந்துபோனது. அந்த மாணவர்கள், தாங்கள் செய்த தவறுக்கு அவரிடம் வருத்தம் தெரிவித்து, "நீங்கள் இதுவரை துப்பாக்கியை தொட்டது கூட இல்லை, உங்களுக்கு இது எப்படி சாத்தியம்?" என்று கேட்டனர்.
அதற்கு அவர் தந்த விளக்கம் இதோ...
"நாம் எல்லோரும் ஒரு செயலை முதன் முதலாக செயல்படுத்தும்பொழுது, அதிக கவனத்துடனும், அதிக ஈடுபாடுடனும், அதிக அக்கறையுடனும், கருமமே கண்ணாகவும் செய்வதுண்டு. எனவெ நாம் அதில் வெற்றி பெறுவது எளிது. ஆகவே, எந்த ஒரு செயலை செயல்படுத்தும்பொழுதும் அதுவே முதல் தடவை என்று என்ணி செயல்படும்பொழுது வெற்றி என்பது எளிதாகிவிடும்."
இதையே,
"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து"
என்று, நான் வணங்கும் வள்ளுவர் தன் மொழியில் கூறியுள்ளார்.
இந்த உலகில் ஒவ்வொருவரும் தாம் செய்யும் செயல்களுக்கு,
அங்கிகாரம் கிடைக்கையில் மட்டற்ற மகிழ்சியடைகிறோம். அது
நமக்கு கிடைத்த பாராட்டு மட்டுமல்ல, வரும் நாட்களில்
நம்மை ஊக்குவிக்கும் உந்துசக்தியும் அதுவே. அங்கிகாரம் கிடைக்க நாம் செய்த உழைப்பை விட, அதை தக்க வைத்துகொள்ள நாம் கடினமாக உழைத்திட வேண்டும்.
அதை எளிதாக செய்திட தூண்டும் ஒரு நிகழ்வு..
ஒருமுறை சில மாணவர்கள் ஒரு மரத்தின் கிளையின் ஒரு பந்தை தொங்க விட்டு, அதை துப்பாக்கியால் சுட முயன்றனர். அவர்களால் பல முறை முயன்றும் சரியாக சுட முடியவில்லை. அப்போது அந்த வழியே வந்த சுவாமி விவேகானந்தர், "நான் ஒருமுறை சுடுகிறேன். துப்பாக்கியை என்னிடம் தாருங்கள்" என்றார். அதற்கு அவர்கள் "நீங்கள் இதுவரை துப்பாக்கியை தொட்டது கூட இல்லை, உங்களால் சுட முடியாது" என்று ஏளனம் செய்து, துப்பாக்கியை அவரிடம் கொடுத்தனர். அதற்கு, "நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நான் இதுவரை துப்பாக்கியை தொட்டது கூட இல்லை, ஆயினும் நான் சுட முயற்சி செய்கிறேன்" என்றவர் அந்த பந்தை நோக்கி குறிவைத்தார். அவர் சுட்டதும் அந்த பந்து சிதைந்துபோனது. அந்த மாணவர்கள், தாங்கள் செய்த தவறுக்கு அவரிடம் வருத்தம் தெரிவித்து, "நீங்கள் இதுவரை துப்பாக்கியை தொட்டது கூட இல்லை, உங்களுக்கு இது எப்படி சாத்தியம்?" என்று கேட்டனர்.
அதற்கு அவர் தந்த விளக்கம் இதோ...
"நாம் எல்லோரும் ஒரு செயலை முதன் முதலாக செயல்படுத்தும்பொழுது, அதிக கவனத்துடனும், அதிக ஈடுபாடுடனும், அதிக அக்கறையுடனும், கருமமே கண்ணாகவும் செய்வதுண்டு. எனவெ நாம் அதில் வெற்றி பெறுவது எளிது. ஆகவே, எந்த ஒரு செயலை செயல்படுத்தும்பொழுதும் அதுவே முதல் தடவை என்று என்ணி செயல்படும்பொழுது வெற்றி என்பது எளிதாகிவிடும்."
இதையே,
"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து"
என்று, நான் வணங்கும் வள்ளுவர் தன் மொழியில் கூறியுள்ளார்.
Monday, February 20, 2006
கேட்டதில் பிடித்தது...
தமிழ் திரைப்படங்களில் வரும் பாடல்களை, தமிழ் தெரியாத பின்னனி பாடகர்கள் பாடும் பொழுது, பாடல் வரிகள் எல்லோரையும் சென்றடைவதில்லை.
இதோ அதற்கான ஒரு சான்று,
"அலைபாயுதே" என்னும் திரைப்படத்தில் வரும் "சிநேகிதனே" என்னும் பாடல். இந்த பாட்டின் ஆரம்பத்தில் வரும் அனுபல்லவி இதோ...
"நேற்று முன் இரவில் - உன்
நித்திலப்பூ மடியில்
காற்று நுழைவதுபோல்
உயிர் கலந்து களித்திருந்தேன்.
இன்று பின் இரவில்
அந்த ஈர நினைவில்
கன்று தவிப்பதுபோல்
மனம் கலங்கி புலம்புகிறேன்.
கூந்தல் நெளிவில்
எழில் கோலச் சரிவில்
கர்வம் அழிந்ததடி - என்
கர்வம் அழிந்ததடி.
சிநேகிதனே...சிநேகிதனே....."
கவிப்பேரரசு வைரமுத்து வின் "பெய்யன பெய்யும் மழை" என்னும் கவிதை தொகுப்பில் "மெய்பொருள்" என்னும் தலைப்பில் இந்த வைர வரிகள் உள்ளது.
இந்த வரிகளை மனதில் கொண்டு, பாடலை இனியொருமுறை கேளுங்கள். பாடலின் சுகம் புரியும்.
Friday, February 17, 2006
ஆப்பிள்...
"தலைமுறை" என்னும் பதிவின் தொடர்ச்சியாக என் சிந்தனைக்கு எட்டிய ஒரு செய்தி.
சர் ஐசக் நியூட்டன், ஒரு நாள் ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்தபோது அவரது தலையில் ஒரு ஆப்பிள் விழுந்ததாகவும், அந்த நிகழ்வே அவருக்கு புவியீர்ப்புவிசையை கண்டறிய தூண்டுகோலாக இருந்தது என்றும் நம்மில் பலர் அறிந்த செய்தி. ஆனால் இது முற்றிலும் ( மிகைப்படுத்தப்பட்ட) தவறான செய்தி என்றும், நியூட்டன் ஒருபோதும் அப்படி கூறியதில்லை என்றும் "ஸ்டீபன் ஹாக்கிங்" என்னும் இயற்பியல் வல்லுனர் கூறுகிறார்.
( The story that Newton was inspired by an apple hitting his head
is almost certainly apocryphal. All Newton ever said was that the
idea of gravity came to him as he sat "in a contemplative mood"
and was "occasioned by the fall of an apple")
courtesy: "A Brief History Of Time" by Stephen Hawking.
அதாவது, நியூட்டன் தான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த பொழுது புவியீர்ப்புவிசையை கண்டறிந்தார் என்றும், அச்சமயம் அவரது தலையில் ஆப்பிள் விழுந்தது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகிறார்.
சர் ஐசக் நியூட்டன், ஒரு நாள் ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்தபோது அவரது தலையில் ஒரு ஆப்பிள் விழுந்ததாகவும், அந்த நிகழ்வே அவருக்கு புவியீர்ப்புவிசையை கண்டறிய தூண்டுகோலாக இருந்தது என்றும் நம்மில் பலர் அறிந்த செய்தி. ஆனால் இது முற்றிலும் ( மிகைப்படுத்தப்பட்ட) தவறான செய்தி என்றும், நியூட்டன் ஒருபோதும் அப்படி கூறியதில்லை என்றும் "ஸ்டீபன் ஹாக்கிங்" என்னும் இயற்பியல் வல்லுனர் கூறுகிறார்.
( The story that Newton was inspired by an apple hitting his head
is almost certainly apocryphal. All Newton ever said was that the
idea of gravity came to him as he sat "in a contemplative mood"
and was "occasioned by the fall of an apple")
courtesy: "A Brief History Of Time" by Stephen Hawking.
அதாவது, நியூட்டன் தான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த பொழுது புவியீர்ப்புவிசையை கண்டறிந்தார் என்றும், அச்சமயம் அவரது தலையில் ஆப்பிள் விழுந்தது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகிறார்.
இதன் மூலம் நான் அறியப்படும் செய்தி, தலையில் ஆப்பிள் விழுந்ததால் புவியீர்ப்புவிசை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், புவியீர்ப்புவிசை கண்டுபிடிக்கப்பட்டபோது ஆப்பிள் விழுந்தது என்பதாகும்.
தலைமுறை...
ஒவ்வொரு தலைமுறையின் தலையாய கடமைகளில் ஒன்று, தாம் கற்றுணர்ந்ததை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பதாகும்.
அவ்வாறு எடுத்துரைக்க இயலாத ( தவறிய) ஒவ்வொரு
தலைமுறையும் "இணரூழ்த்தும் நாறா மலர்" க்கு இனையாவர்
என்பது வள்ளுவர் வாக்கு.
கடந்தகாலத்தை வருங்காத்திற்கு எடுத்துச் செல்பவர்கள், தான்
எடுத்துச் செல்லும் செய்திகளின் மெய்யறிந்து, மிகைப்படுத்தாமல் எடுத்துச் செல்லவேண்டும். செய்திகளை மிகைப்படுத்துதலுக்கு
ஆட்படுத்தும் போது, அதன் மெய்வடிவம் ம்ருவி, தவறான
செய்திகள்தான் வருங்காலத்தைச் சென்றடைகிறது.
என் சிந்தனைக்கு எட்டிய சில ( மிகைப்படுத்தப்பட்ட) செய்திகளை
வரும் பதிவுகளில் பதியவுள்ளேன்.
அவ்வாறு எடுத்துரைக்க இயலாத ( தவறிய) ஒவ்வொரு
தலைமுறையும் "இணரூழ்த்தும் நாறா மலர்" க்கு இனையாவர்
என்பது வள்ளுவர் வாக்கு.
கடந்தகாலத்தை வருங்காத்திற்கு எடுத்துச் செல்பவர்கள், தான்
எடுத்துச் செல்லும் செய்திகளின் மெய்யறிந்து, மிகைப்படுத்தாமல் எடுத்துச் செல்லவேண்டும். செய்திகளை மிகைப்படுத்துதலுக்கு
ஆட்படுத்தும் போது, அதன் மெய்வடிவம் ம்ருவி, தவறான
செய்திகள்தான் வருங்காலத்தைச் சென்றடைகிறது.
என் சிந்தனைக்கு எட்டிய சில ( மிகைப்படுத்தப்பட்ட) செய்திகளை
வரும் பதிவுகளில் பதியவுள்ளேன்.
Friday, February 10, 2006
ஆழிப்பேரலை...
பஞ்ச பூதங்களே....
உங்களுக்குள் என்ன போட்டியா?
யார் மீது "பரணி" பாடவேண்டும் என்று.
மூங்கில் காடுகளில் தலைவிரித்தாடுகிறாள் ஒருத்தி.
"ரிக்டர்" அளவில் ஆடிக்காட்டுகிறாள் ஒருத்தி.
வாடைக் காற்றில் பாடைக் கட்டுகிறாள் ஒருத்தி.
"ஒசோன்" ஓட்டையால் உலக வெப்பம் உயர்த்துகிறாள் ஒருத்தி.
ஆழிப்பேரலையாகவும் ஊழிப்பெருவெள்ளமாகவும்
வந்து வென்றாள் தலைவி ஒருத்தி.
அவளுக்கு,
எனது பானியில்
"பரணி" பாடுகின்றேன்.
கடல் கொண்ட தமிழ்நாடு - இன்று
கடல் உண்ட தமிழ்நாடு.
பேரலையே...
நீ நீருக்கடியில் செய்த
அணு ஆயுத சோதனையா?
சோதணையின் வேதனையே
பல போதனைகள் தந்தாயிற்று..
வேண்டாம் மற்றொன்று..
"அமைதி" க்கு சான்றான கடலை
"சமாதி" க்கு உவமேயம் ஆக்கினாய்.
நல்லோர் எழுச்சி மகிழ்ச்சிதானே..
உன் எழுச்சி மட்டும் வீழ்ச்சியானதே.
உப்பிட்ட உன்னை
உள்ளவும் நினைத்தோம்.
நீயோ..
மனித அறுவடை செய்து,
மானுடம் சிந்திய கண்ணீரில்
உப்பு சமைக்கின்றாய்
வேண்டாம்
அந்தஉப்பு எங்களுக்கு.
காலி குடங்களை நிறப்பத்தான் கேட்டோம்.
இடுகாட்டில் பல நீர்குடங்களை ஏன் உடைத்தாய்.
வாடிய பயிரை காக்கத்தான் கேட்டோம்.
மனித வேரை ஏன் அறுத்தாய்.
பள்ளியின் நெருப்பை அனைக்கத்தான் கேட்டோம்.
பள்ளியில் பற்றியதைகொள்ளியி ஏன் ஏற்றினாய்.
கடல் அன்னை என்றோம்.
பூகம்பத்தின் பினாமி என்கிறாய்.
மணல் வீடு அழித்து விளையாடு என்றோம்.
காரை வீடும் வேண்டும் என்கிறாய்.
"விடாமுயற்சி" க்கு அலை என்றோம்.
"மூச்சை விடு" என்கிறாய்.
பூமியின், மூன்றில் இரண்டுபங்கு
இடஒதிக்கீடு என்றோம்.
போதாதென்று கடலை விட்டு
வெளிநடப்பு செய்கிறாய்.
ஆயிரம் கொன்றால் அரைவைத்தியம்
என்பதை தவறாய் உணர்ந்து,
முழுவைத்தியத்தையும் அரைநொடியில்
கற்றாயோ...
பழைய பாடம் அழித்து
புதிய படாம் புகற்றினாய்.
சாது மிரண்டாலும் காடு கொள்ளும் - கொள்ளாதே
கடல் மிரண்டால் நாடு.
கடல் கொண்ட தமிழ்நாடு - இன்று
கடல் உண்ட தமிழ்நாடு.
- தமிழ் தாசன்
காதலே...
உயிர் கொடுத்ததும் - பின்
உடல் கொடுத்ததும் காதல்
உன்னை கண்டதும் - பின்
என்னை கண்டதும் காதல்
தன்னலம் அழித்ததும் - பின்
தலைக்கணம் அழித்ததும் காதல்
நேசம் தந்ததும் - பின்
பாசம் தந்ததும் காதல்
நான் கொண்டதும் - பின்
என்னை கொண்டதும் காதல்
நீ வந்ததும் - பின்
கவி வந்ததும் காதல்
முடிவாக...
நான் தொலைத்ததும் - பின்
என்னை தொலைத்ததும் காதலே...
-தமிழ் தாசன்.
Tuesday, February 07, 2006
அகர முதல...
Subscribe to:
Posts (Atom)