Monday, September 24, 2007
Tuesday, September 18, 2007
என்னவளுக்காக ஒரு வெண்பா...
முதன் முதலாய் ஒரு
மரபுக் கவிதை இயற்றிட,
பாடுபொருள் நான் தேட,
என்னவள் முறைத்திட,
இதோ அவளுக்காக, நேரிசை வெண்பாவில்...
பாரியின் தேர்கொண்ட மெல்லிடையாள் என்னவள்
மரபுக் கவிதை இயற்றிட,
பாடுபொருள் நான் தேட,
என்னவள் முறைத்திட,
இதோ அவளுக்காக, நேரிசை வெண்பாவில்...
பாரியின் தேர்கொண்ட மெல்லிடையாள் என்னவள்
தேரில் வரக்கண்டு கர்வமுற்றாள் - என்னவளோ
வெற்றிவிழா யாருக்குச் சொந்தமென கேட்டிட
போற்றினேன் முல்லையைப் பொய்த்து
Sunday, September 16, 2007
இது ஒரு காதல் கதை - பாகம் 3.
இது ஒரு காதல் கதை - பாகம் 1.
இது ஒரு காதல் கதை - பாகம் 2.
காற்றில் மிதந்தவாறே, கீதாவைப் பார்த்தவன்,
"இந்த இரண்டு விரல்ல, ஒன்ன தொடு" என்று, தன் கைகளை நீட்ட,
"எதுக்குன்னு சொல்லு? அப்பதான் தொடுவேன்.."
"இப்பெல்லாம், நீ ரொம்பத்தான் கேள்வி கேக்குற" என்று அவன் சொல்லிமுடிப்பதற்குள்,
"சரி.. சரி.. இந்த விரல்... இப்பவாவது சொல்லு.."
"அப்புறமா சொல்றேன்"..
"டேய்... ஏமாத்தாத.. இப்ப ஒழுங்க சொல்லு.. இல்ல, அடிவாங்கபோற"...
"நல்ல இருக்கே கதை, "இப்ப சொல்லவா" இல்ல "அப்புறமா சொல்லவா"ன்னு, நான் கேட்டபோ, நீ தான் இந்த விரல்ல தொட்ட.."
விழிகள் ரசிக்க, இதழ்கள் மட்டுமே கோபத்துடன், "இப்பெல்லாம், நீ நல்லா பேச கத்துகிட்ட, "
வாகைச் சூடியவனாய், அவன் நகைக்க,
"சரி..அப்புறம்னா, எப்போ?"
"அப்புறம்னா.. நீ சொன்னத்துக்கு அப்புறம்"
"மறுபடியும் என்ன ஏமாத்த நினைச்ச.., நான் உன்கூட பேச மாட்டேன்..,"
புன்னகை குறையாமல்,"சரி சரி.. நீ சொல்லு.. என்ன விசேஷம்?"
முகமுழுதும் பூரிப்புடன், "அதுவா.. என் அக்காவிற்கு கல்யாணம் நிச்சயாமாயிடுச்சி.. அதான் சந்தோஷம்.."
"வாழ்த்துகள்... அடுத்தது உனக்கு தான்.. அதான் ரொம்ப சந்தோஷமா இருக்கியா?"
வெட்கத்துடன் "போடா... அதுக்கு இன்னும் அஞ்சு வருஷம் இருக்கு.."
"அக்காவிற்கு, லவ் மேராஜா? இல்ல.. "என்று அவன் கேள்வி முடியுமுன்,
"ஏன் அப்படி கேக்குற?.. லவ் எல்லாம் ஒன்னுமில்ல.. அப்பாவும் அம்மாவும், பார்த்த மாப்பிள்ளைதான்.."
"லவ் பன்ன தைரியம் இல்லன்னு சொல்லு.."
"இல்லப்பா, இதுல தைரியத்துக்கு இடமே இல்ல..பெத்தவங்க நம்ம மேல நம்பிக்கை வச்சிருக்காங்க..அந்த நம்பிக்கைக்கு,நம்ம குடுக்கிற மரியாதைன்னு வச்சுக்கோயேன்.."
காற்றில் பறந்தவன், மெதுவாக கீழிறங்கியவாறே,
"இதுல, நம்பிக்கை துரோகம் எங்கிருந்து வந்துச்சு.. நான் என்ன, வீட்டிற்கு தெரியாமலா கல்யாணம் பன்னிக்க சொல்றேன்?.. பெத்தவங்க சம்மதத்தோட தான் பன்னிக்க சொல்றேன்.."
"ம்ஹூம்.. நீ என்னதான் சொல்லு.. இதுல எனக்கு உடன்பாடே கிடையாது..வேலை கிடைக்கிற வரை, அவங்க தயவில இருந்துட்டு,அப்புறமா "நான் ஒருத்தர காதலிக்கிறேன்.., கல்யாணம் பன்னிவைங்க.. "ன்னு சொல்றது, உனக்கு வேனா தைரியமா தெரியலாம்.. ஆனா எனக்கு,அது சுயநலமா தான் தெரியுது.. "
கீழே விழுந்ததைக் காட்டிக்கொள்ளாமல்,"உனக்கு புரியவைக்கிறது கொஞ்சம் கஷ்டம்.. உன்ன புரிஞ்சுகிறது அதைவிட கஷ்டம்.. " என்று முனுமுனுக்க.
"என்ன.. வாய்க்குள்ளே பேசிக்கிற?.."
"உன்ன நினைச்சா.. ரொம்ப பெருமையா இருக்குமா... ரொம்ப பெருமையா இருக்கு"..என்றான் நடிகர் திலகம் போல்.
"நல்லாதான் ட்ரை பன்ற.. சரி.. இத விடு... நீ ஏதோ சொல்லனும்னு சொன்னல்ல,அதை சொல்லு.."
"அதுவா.. அது வந்து.. "என்று வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தவனை இடைமறித்தான் சுந்தர்.
"இங்க இருக்கீங்களா, நான் ஆடிட்டோரியத்தில் தேடினேன்" என்றவன்,
கீதாவிடம், "முன்னாடியே சொல்லிருந்தா, நாங்களும் வேஷ்டி சட்டைல வந்திருப்போம்ல?"
"அதுக்கு தான் சொல்லல.. " என்றாள் சிரித்துக்கொண்டே..
தெய்வம் போல வந்து காப்பாற்றியவனுக்கு மனதில் நன்றி சொல்லிவிட்டு, "எதுக்கு என்ன தேடின?.."
"Camera வொர்க் பன்னலடா, அதை சொல்லதான் வந்தேன்"..
"அது வொர்க் பன்னாதுன்னு தெரியும் டா"..
"தெரியுமா?, அப்புறம் ஏண்டா எடுத்துட்டு வந்த?.. அதுவும் farewell-க்கு வரனும்னு சொல்லுச்சா"..
"டேய்,நீ வேற.. ஏண்டா?.. அதுல பேட்டரி இல்லடா.. வாங்கனும்னு நினைச்சேன்.. வந்த அவசரத்துல மறந்துட்டேன்"..
"சரி.. பங்ஷன் ஆரம்பிக்கபோகுது.. ஆடிட்டோரியம் போங்க.. பைக் சாவி கொடுடா.. நான் வாங்கிட்டு வரேன்"
பைக் சாவியை கொடுத்திட்டு, வசந்த் கீதாவுடன் ஆடிட்டோரியம் நோக்கி நடந்தான்.
ஆடிட்டோரியம் வந்தவுடன்,
"கீதா.. நான் சொலல வந்ததை, இன்னொரு நாள் சொல்றேன்.."
"கண்டிப்பா சொல்லனும்.. சரியா?.." என்று அவனிடமிருந்து விடைபெற,
"சரி" என்பது போல் விழி இமைகளை பணித்தவன், நினைவுகளில் இருந்து மீண்டான்
இமைகள் திறந்த பொழுது, மழை மேகத்தின் முதல் துளி,
மண்ணை முத்தமிட்டு, மண் வாசனை வீசத்தொடங்கிற்று.
ஜன்னலின் வழியே, மழையை ரசிக்கலாணான்.
--- இன்று : கோவையில் ---
-மீண்டும் காதலிப்போம்
Friday, September 07, 2007
இது ஒரு காதல் கதை - பாகம் 2.
இது ஒரு காதல் கதை - பாகம் 1.
---மூன்று வருடங்களுக்கு முன்---
திருச்சி பிள்ளையார் கோவில் தெருவில்
"ட்ரிங்... ட்ரிங்... "
வசந்த் வீட்டு வாசலில் சுந்தர் தன் சைக்கிளுடன்.
"டேய் வசந்த், நீ இன்னும் ரெடி ஆகலையா?"..
"ஒரு நிமிஷம் டா, இதோ வந்துட்டேன்"..
"camera எடுத்துட்டியாடா?"..
"எடுத்தாச்சுடா "..
"நம்மதான் கடைசினு நினைக்கிறேன்.எல்லோரும் வந்திருப்பாங்க.சீக்கிரம் வா"..
"நீ சைக்கிளை இங்க விடு, நாம பைக்-ல போலாம்"..
"பைக்-லயா?..அப்பா ஊருக்கு போயிருக்காங்களா?.. சொல்லவே இல்ல.."
"அடுத்த தடவை சொல்ல சொல்றேன்.. நீ பைக்ல ஏறு.."
பைக்-கை ஸ்டார்ட் செய்த வசந்த, வாசலில் நின்ற அம்மாவிடம்,
"அம்மா, நாங்க போய்ட்டு வர்றோம், கொஞ்சம் லேட்டாதான் வருவோம்"..
"பார்த்து போய்ட்டு வாங்க.. பைக்-ல கொஞ்சம் மெதுவா போங்கப்பா.."
பைக், அம்மாவின் பார்வையில் இருந்து மறைந்து, மெயின் ரோட்டை தொட்டதும் வேகம் கூடியது.கீதா வீட்டிற்கு செல்லும் பாதையில் பைக்கை திருப்பினான் வசந்த்.
"டேய் வசந்த், ஏற்கனவே லேட்டு..இன்னைக்கும் சுத்திட்டு தான் போகனுமா? இப்ப அவ ஸ்கூல்ல இருப்பாடா"..
"பைக்ல தான போறோம்.. சீக்கிரம் போயிடலாம்டா"..
அவர்கள் கீதா வீட்டை நெருங்கிய போது, பைக் வேகம் குறைந்தது.கீதா வீட்டு பைக் ஸ்டானட் காலியாக இருக்கவே, பைக் வேகம் கூடியது.
பின்னாலிருந்த சுந்தர்,
"நம்ம பேச்ச எவன் கேக்குறான்.."
பைக், ஸ்கூல் காம்பவுண்டை நெருங்கியது.பின்னாலிருந்த சுந்தர், ஸ்கூல் வாசலில் இருந்த பெரிய போர்டை காட்டி,
"இங்க பாருடா மச்சி.. சும்மா சொல்லகூடாது.. ஜூனியர் பசங்க கலக்குறாங்க.."
"FAREWELL DAY - 2002", என்ற வாசகத்தை தாங்கி நின்றது அந்த போர்டு.
"ஆமாடா, போன வருஷம், நாம கூட இப்படி பன்னலையே.."
பைக்கை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு, வேகமாக ஆடிட்டோரியம் சென்றார்கள்.
சுந்தர் சந்தோஷமாக, "டேய், பொன்னுங்க எல்லம் சேலை கட்டி வந்திருகாங்கடா.."
இவர்களைப் பார்த்த மாணவர் கூட்டம்,"டேய்.. வந்துடாய்ங்கடா.. வசந்தா, ஏண்டா லேட்டு?"..
கேள்வியை காதில் வாங்கியவன், பதில் கூறாமல், கீதாவைத் தேடினான்.
"அத, நான் சொல்றேன் மச்சி" என்று உள்ளே வந்தான் சுந்தார்.
மாணவர் கூட்டம் சந்தோஷமாக "சொல்லுடா, லவ் மேட்டரா?"
"அது ஒன்னுமில்ல மச்சி, சென்னையில் இருக்கிற எங்க மாமா வீட்டு பைப்புல தண்ணி வரலயாம்...அதனால.. எங்க மாமா.." என்று, சுந்தர் வாய்க்கு வந்த கதை சொல்ல, முறைத்தது மாணவர் கூட்டம்.
சுந்தர் அவர்களை சமாளித்து கொண்டிருந்தான்.
அங்கிருந்து விலக நினைத்த வசந்த் முதுகில் யாரோ தட்ட, திரும்பினான்.
"இப்பதான் வந்தியா, உன்னைத் தான் தேடிட்டு இருந்தேன்" என்றாள் கீதா.
வசந்தகால வானாய் நீலப் பட்டுடுத்தி,
கருநீல மேகமாய் கேசம் காற்றிலாட,
விண் மீனாய் மலர்களைத் தாங்கி,
மழைத் துளியாய் புன்னகைத் ததும்பும்,
பொன் நிலவாய் இருந்தவளைப் பார்த்தவன்,
தன் எடை முழுதும் தொலைத்து
காற்றில் மிதந்தான் சிறகாய்.
"என்னாச்சுடா?.." என்பது போல் அவளது விழிகள் வினா எழுப்ப,
சிறிது மவுனத்திற்கு பிறகு, "நானும் உன்னைத் தான் தேடிட்டு இருந்தேன்" என்றான்.
"சரி.. வா, அங்கே போய் பேசலாம்" என்றவள், ஆடிட்டோரியம் வெளியே இருந்த மரத்தடிக்கு அவனை அழைத்து வந்தாள்.
"நீ சேலையில் ரொம்ப அழகா இருக்க, தெரியுமா?"..
"தேங்கஸ் டா"..
"அத விட முக்கியாமா, இன்னைக்கு நீ ரொம்ப சந்தோஷமா இருக்க, என்ன விசேஷம்?"..
"அதை சொல்லத்தான், உன்னைத் தேடிட்டு இருந்தேன்"
வெகுநாட்களாக, சொல்ல நினைத்ததை இன்று சொல்லிவிட வேண்டுமென்று நினைத்தவன்,
"நானும், ஒரு விஷயம் சொல்லனும்னுதான் உன்னைத் தேடிட்டு இருந்தேன்"
"அப்போ, நீயே முதல்ல சொல்லுடா"..
காற்றில் மிதந்தவாறே,தான் சொல்ல வந்ததை,
மனதில் வெள்ளோட்டம் பார்த்துவிட்டு,
சொல்ல முற்பட்டவன், நிறுத்திவிட்டு.. அவளைப் பார்த்தான்.
-மீண்டும் காதலிப்போம்
Thursday, September 06, 2007
இது ஒரு காதல் கதை - பாகம் 1.
வழக்கம் போல் காரைக்குடி மெஸ்-இல் சாப்பிட்டு வந்தவன், computer-இல் பாடல்களைப் பாடவிட்டு, கட்டிலில் படித்திருந்தான்.
"நான் தேடும் செவ்வந்தி பூவிது.." முதல் பாடலானது.
கொஞ்சம் நேரம் கழித்து வந்தான் சுந்தர்.
"டேய் வசந்த்"..
"ம்ம்ம்"..
"சாப்டாச்சாடா?"..
"ம்ம்ம்"..
"காலேஜ்-ல பிராக்டிக்கல் எக்ஸாம் டா.. செம கடி.. அதான் லேட்.."
"ம்ம்ம்"..
"என்னடா உடம்பு சரியில்லையா?"..
"அப்படியெல்லம் ஒன்னும் இல்ல டா"..
"அப்புறம் ஏன் மொனங்குற... சரி.. நாளைக்கு எங்க காலேஜ் லீவுடா.. நீயும் கட் அடிச்சிடு.. படத்துக்கு போலாம்.."
"நாளைக்கு நான் கட் தான்டா, ஆனா மேட்டுப்பாளையம் போறேன்.."
"மேட்டுப்பாளையமா?.. எதுக்கு?"
"கீதாவை பாக்க போறேன்"
"நம்ம ஸ்கூல்ல படிச்ச கீதாவா?.. அங்க தான் படிக்கிறாளா?.. யாருடா சொன்னா?"
"அவதான் சொன்னா.. இன்னைக்கு phone பன்னா"
"அதான் ஒரே காதல் பாட்டா ஒடுதா.. அது சரி.. "
"அப்படி இல்லடா.. சரி.. . எதுக்குடா வரசொல்லிருப்பா?.."
"அதுவா.. அது ஒன்னுமில்லடா மச்சி.. ஸ்கூல்ல படிக்கும் போது ஒரு நாள் இருபது ரூவா வாங்கினல்ல.. அத கேட்கத்தான் வரசொல்லிருப்பா"
"விளையாடதடா.."என்னை பார்க்கனும் போல இருக்கு"னு சொன்னாடா.."
"சரி... போய் பாரு.."
"டேய்.. என்ன டிரஸ் போட்டு போக?"
"ஏன்டா இம்சை பன்ற.. பொன்னு பார்க்கவ போற?.. ஏதோ ஒன்னு போட்டு போடா.."
"ம்ம்ம்"..
"கண்டிப்பா ஏதாவது ஒரு டிரஸ் போட்டு போடா..மறந்திட்டுப் போயிட போற.. "
சட்டை மாற்றிக்கொண்டு வெளியே கிளம்பினான் சுந்தர்.
"எங்கடா போற?"..
"டெய்லி நைட்டு இரண்டு தோசை சாப்பிட்டா, ரொம்ப நல்லதுனு எங்கப்பா சொன்னாருடா.. அதான் சாப்பிட போறேன்.."
"யாருக்கு நல்லது.. மெஸ் ஒனருக்கா?"..
"அத.. வந்து சொல்றேன்.. மெஸ் பூட்டிட போறான்"..
சுந்தர் போனதும், சிகரெட்டை பற்ற வைத்தான் வசந்த்.
"கண்மனி.. அன்போட காதலன் நான்".. computer-இல் கமல் பாட ஆரம்பித்தார்..
புன்னகைத்தவாறே புகைத்து கொண்டிருந்தான்.
புன்னகைத்தவாறே புகைத்து கொண்டிருந்தான்.
புகை காற்றில் கரைந்தது.அவன் காலத்தில் கரைந்தான்.
---மூன்று வருடங்களுக்கு முன்---
-மீண்டும் காதலிப்போம்
Subscribe to:
Posts (Atom)