Sunday, September 16, 2007

இது ஒரு காதல் கதை - பாகம் 3.



இது ஒரு காதல் கதை - பாகம் 1.

இது ஒரு காதல் கதை - பாகம் 2.


காற்றில் மிதந்தவாறே, கீதாவைப் பார்த்தவன்,

"இந்த இரண்டு விரல்ல, ஒன்ன தொடு" என்று, தன் கைகளை நீட்ட,

"எதுக்குன்னு சொல்லு? அப்பதான் தொடுவேன்.."

"இப்பெல்லாம், நீ ரொம்பத்தான் கேள்வி கேக்குற" என்று அவன் சொல்லிமுடிப்பதற்குள்,

"சரி.. சரி.. இந்த விரல்... இப்பவாவது சொல்லு.."

"அப்புறமா சொல்றேன்"..

"டேய்... ஏமாத்தாத.. இப்ப ஒழுங்க சொல்லு.. இல்ல, அடிவாங்கபோற"...

"நல்ல இருக்கே கதை, "இப்ப சொல்லவா" இல்ல "அப்புறமா சொல்லவா"ன்னு, நான் கேட்டபோ, நீ தான் இந்த விரல்ல தொட்ட.."

விழிகள் ரசிக்க, இதழ்கள் மட்டுமே கோபத்துடன், "இப்பெல்லாம், நீ நல்லா பேச கத்துகிட்ட, "

வாகைச் சூடியவனாய், அவன் நகைக்க,

"சரி..அப்புறம்னா, எப்போ?"

"அப்புறம்னா.. நீ சொன்னத்துக்கு அப்புறம்"

"மறுபடியும் என்ன ஏமாத்த நினைச்ச.., நான் உன்கூட பேச மாட்டேன்..,"

புன்னகை குறையாமல்,"சரி சரி.. நீ சொல்லு.. என்ன விசேஷம்?"

முகமுழுதும் பூரிப்புடன், "அதுவா.. என் அக்காவிற்கு கல்யாணம் நிச்சயாமாயிடுச்சி.. அதான் சந்தோஷம்.."

"வாழ்த்துகள்... அடுத்தது உனக்கு தான்.. அதான் ரொம்ப சந்தோஷமா இருக்கியா?"

வெட்கத்துடன் "போடா... அதுக்கு இன்னும் அஞ்சு வருஷம் இருக்கு.."

"அக்காவிற்கு, லவ் மேராஜா? இல்ல.. "என்று அவன் கேள்வி முடியுமுன்,

"ஏன் அப்படி கேக்குற?.. லவ் எல்லாம் ஒன்னுமில்ல.. அப்பாவும் அம்மாவும், பார்த்த மாப்பிள்ளைதான்.."

"லவ் பன்ன தைரியம் இல்லன்னு சொல்லு.."

"இல்லப்பா, இதுல தைரியத்துக்கு இடமே இல்ல..பெத்தவங்க நம்ம மேல நம்பிக்கை வச்சிருக்காங்க..அந்த நம்பிக்கைக்கு,நம்ம குடுக்கிற மரியாதைன்னு வச்சுக்கோயேன்.."

காற்றில் பறந்தவன், மெதுவாக கீழிறங்கியவாறே,

"இதுல, நம்பிக்கை துரோகம் எங்கிருந்து வந்துச்சு.. நான் என்ன, வீட்டிற்கு தெரியாமலா கல்யாணம் பன்னிக்க சொல்றேன்?.. பெத்தவங்க சம்மதத்தோட தான் பன்னிக்க சொல்றேன்.."

"ம்ஹூம்.. நீ என்னதான் சொல்லு.. இதுல எனக்கு உடன்பாடே கிடையாது..வேலை கிடைக்கிற வரை, அவங்க தயவில இருந்துட்டு,அப்புறமா "நான் ஒருத்தர காதலிக்கிறேன்.., கல்யாணம் பன்னிவைங்க.. "ன்னு சொல்றது, உனக்கு வேனா தைரியமா தெரியலாம்.. ஆனா எனக்கு,அது சுயநலமா தான் தெரியுது.. "

கீழே விழுந்ததைக் காட்டிக்கொள்ளாமல்,"உனக்கு புரியவைக்கிறது கொஞ்சம் கஷ்டம்.. உன்ன புரிஞ்சுகிறது அதைவிட கஷ்டம்.. " என்று முனுமுனுக்க.

"என்ன.. வாய்க்குள்ளே பேசிக்கிற?.."

"உன்ன நினைச்சா.. ரொம்ப பெருமையா இருக்குமா... ரொம்ப பெருமையா இருக்கு"..என்றான் நடிகர் திலகம் போல்.

"நல்லாதான் ட்ரை பன்ற.. சரி.. இத விடு... நீ ஏதோ சொல்லனும்னு சொன்னல்ல,அதை சொல்லு.."

"அதுவா.. அது வந்து.. "என்று வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தவனை இடைமறித்தான் சுந்தர்.

"இங்க இருக்கீங்களா, நான் ஆடிட்டோரியத்தில் தேடினேன்" என்றவன்,

கீதாவிடம், "முன்னாடியே சொல்லிருந்தா, நாங்களும் வேஷ்டி சட்டைல வந்திருப்போம்ல?"

"அதுக்கு தான் சொல்லல.. " என்றாள் சிரித்துக்கொண்டே..

தெய்வம் போல வந்து காப்பாற்றியவனுக்கு மனதில் நன்றி சொல்லிவிட்டு, "எதுக்கு என்ன தேடின?.."

"Camera வொர்க் பன்னலடா, அதை சொல்லதான் வந்தேன்"..

"அது வொர்க் பன்னாதுன்னு தெரியும் டா"..

"தெரியுமா?, அப்புறம் ஏண்டா எடுத்துட்டு வந்த?.. அதுவும் farewell-க்கு வரனும்னு சொல்லுச்சா"..

"டேய்,நீ வேற.. ஏண்டா?.. அதுல பேட்டரி இல்லடா.. வாங்கனும்னு நினைச்சேன்.. வந்த அவசரத்துல மறந்துட்டேன்"..

"சரி.. பங்ஷன் ஆரம்பிக்கபோகுது.. ஆடிட்டோரியம் போங்க.. பைக் சாவி கொடுடா.. நான் வாங்கிட்டு வரேன்"

பைக் சாவியை கொடுத்திட்டு, வசந்த் கீதாவுடன் ஆடிட்டோரியம் நோக்கி நடந்தான்.

ஆடிட்டோரியம் வந்தவுடன்,
"கீதா.. நான் சொலல வந்ததை, இன்னொரு நாள் சொல்றேன்.."

"கண்டிப்பா சொல்லனும்.. சரியா?.." என்று அவனிடமிருந்து விடைபெற,

"சரி" என்பது போல் விழி இமைகளை பணித்தவன், நினைவுகளில் இருந்து மீண்டான்

இமைகள் திறந்த பொழுது, மழை மேகத்தின் முதல் துளி,
மண்ணை முத்தமிட்டு, மண் வாசனை வீசத்தொடங்கிற்று.
ஜன்னலின் வழியே, மழையை ரசிக்கலாணான்.


--- இன்று : கோவையில் ---




-மீண்டும் காதலிப்போம்

3 comments:

Vathsan said...

Two things pretty interesting,

1. Vizhigal Rasikka, Ethalgal kovathudan...nalla rasanai...

2. Inru Kovaiyil....

Kovai Kathaina vudan I am gettin more excited ;-)

Anonymous said...

விழிகள் ரசிக்க, இதழ்கள் மட்டுமே கோபத்துடன்... So romantic...

ஒவ்வொரு வார்த்தைகளும் ரசிக்கும்படி உள்ளன... அருமை...

தமிழ் தாசன் said...

Vathsan,

Thanks for the feedback...

தமிழ்மகன் அவர்களே,

//விழிகள் ரசிக்க, இதழ்கள் மட்டுமே கோபத்துடன்... So romantic...//

வருகைக்கும், தருகைக்கும் மிக்க நன்றி.