Wednesday, March 01, 2006
குருடுங் குருடும்...
நாம் அனைவரும் நம்மிடம் உள்ள அறியாமையை அகற்றவேண்டுமெனில், அறியாமையை அகற்றும் திறன் படைத்த குருவிடம் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும் பொழுது நாம் அறிந்த கொள்ள வேண்டியவற்றின் மீது நாம் கொண்டிருந்த கற்பனையை முற்றிலும் அகற்றி விட்டுச் செல்ல வேண்டும். இல்லையனில் நம்முடைய கற்பனையே, நமக்கும் குருவுக்கும் இடையே திரையாக இருந்து, நம் அறியாமையை அகற்றிக்கொள்ள தடையாக இருக்கும்.
சமீபத்தில், படித்ததில் பிடித்த இதனைப் போன்றதொரு வாழிவியல் நெறியை விளக்கத்துடன் உங்களுக்காக இதொ...
மெய்யான குருவை சென்றடைவது அதிமுக்கியம் என்றும், அப்படி சென்றடைய தவறினால் ஏற்படும் விழைவையும், திருமூலர் தன் திருமந்திரத்தில் அபக்குவன் ( பொய்யான குரு) என்னும் தலைப்பில் கூறியுள்ளார்.
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடி
குருடுங் குருடுங் குழிவிழு மாறே.
விளக்கம்:
அறியாமையினை நீக்கும் மெய்குருவினை கைக்கொள்ளாதவர், அறியாமை அகற்றும் நெறியே தெரியாத பொய்குருவினை மெய்யன கொள்வார் எனில், அங்கனம் வழிகாட்டத் தெரியாத குருடும், குருடும் கூடி குருட்டு ஆட்டம் கொண்டு குழியில் விழுவது போன்று பொய்குருவும், அவரை மெய்யன கொண்டோரும் அறியாமை என்னும் குழியில் விழ்வது உறுதி.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
hi selva,
Thanks for visiting the blog...
//its great! //
thanks a lot.....
//where did u read all these things da?....//
Nothing but in books...
Post a Comment