Wednesday, February 02, 2011

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு - எதுக்கு இந்த பொழப்பு?



கருணாநிதி:
பாமகவும் எங்களுக்கு 'சமிக்ஞை' கொடுத்திருக்கிறார்கள். நாங்களும் அவர்களுக்கு 'சமிக்ஞை' கொடுத்திருக்கிறோம். ஆனால் எப்போது பேசப் போகிறோம் என்பதற்கு தேதி இன்னும் நிர்ணயிக்கவில்லை.

ராமதாஸ்:
எந்தக் கூட்டணியில் இடம்பெற்றாலும் பாமகவுக்கு 45 தொகுதிகள் வேண்டும்.

கருணாநிதி:
இப்போதைக்கு திமுக, காங்கிரஸ் தவிர, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புரட்சி பாரதம் ஆகியவையும் கூட்டணியில் உள்ளன.

ராமதாஸ்:
சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக வேறு கட்சிகளும் எங்களுடன் பேசி வருகின்றன. இதனால் இதுவரை கூட்டணி குறித்து நாங்கள் முடிவெடுக்கவில்லை.

அன்புமணி ராமதாஸ்:
பாமக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது

கருணாநிதி:
நாங்கள் இருப்பதாகச் சொன்னதை அவர் இல்லை என்று மறுத்த பிறகு, பாமகவுடன் கூட்டணி இல்லை.

ராமதாஸ்:
திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. என்றாலும், தற்போது இது குறித்து சொல்லும் நிலையில் நான் இல்லை. வெகு விரைவில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். முதல்வரின் நம்பிக்கை வீண்போகாது.

ஜி.கே.மணி:
சேலம் மருத்துவமனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்தவர், "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு".

3 comments:

Siva said...

மாம்பழத்த சூரியனும் இலையும் சரியா கண்டுக்காம போயி இப்போ ஈ மொய்க்குற நிலைமைக்கு வந்துடுச்சே..

தமிழ் தாசன் said...

மாங்கொட்டை தான் மிஞ்சும் போல...

தமிழ் தாசன் said...

25 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்றது திமுக

:))))))))))))))))))))