Saturday, December 02, 2006
இருவர் - உன்னோடு நான் இருந்த...
Orkut -இல் ஒரு நன்பர் இந்த வரிகளைத் தேடிக்கொண்டிருந்தார்.
அவருக்கு உதவி செய்ய type செய்தேன்...
நம்ம தமிழ்மண அன்பர்களுக்காக இதோ...
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான்
எண்ணூரு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி!
பார்வையிலே சிலநிமிடம், பயத்தோடு சிலநிமிடம்!கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்!
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களில்
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சிலநிமிடம்!
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!
எது நியாயம், எது பாவம்,
இருவர்க்கும் தோன்றவில்லை!
அது இரவா, அது பகலா,
அதைப்பற்றி அறியவில்லை!
யார் தொடங்க, யார் முடிக்க,
ஒருவழியும் தோன்றவில்லை!
இருவருமே தொடங்கிவிட்டோம்
இதுவரைக்கும் கேள்வியில்லை!
அச்சம் களைந்தேன் ஆசைகளை நீ அணைத்தாய்!
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய்!
கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்,
கடைசியிலே அழுத கண்ணீர்
கையில் இன்னும் முட்டுதடி!
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!