
ஓர் மழை நாளில்,
ஒளி மங்கிய நிலவொளியில்,
ஓர் குடையில் - பத்தில்
ஓர் காத தூர நடந்தோம்,
ஆழியின் அருகே.
அழகின் அர்த்தம் விளங்கிற்று,
அந்த அழகிய அந்தியில்.
ஆழியின் அமைதியை கலைத்து
களித்த, கனத்த காற்று,
பெண் அவளை கடந்த பொழுது,
பணிந்து பண் ஆனது.
அந்நிகழ்வை நோக்கியவன்
நெகிழ்ந்தேன் அக்கணமே.
குளிர் காற்றில் கலந்த,
மழைத் துளிகள் தீண்ட,
வெட்கத்தில் சிணுங்கினாள்.
முதலில் மெய்மறந்தேன்.
பின்பு, பணிந்தே போனேன்
பேதை காற்றாய்.
எனது நாட்குறிப்பேட்டில்,
"ஓர் மழை நாள்" மருவி
"ஓர் அழகிய மழை நாள்" என்றானது.